Thursday 2nd of May 2024 12:34:05 AM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனா: நேற்று நாடு திரும்பியவர்களில் 108 பேர் இன்று திருமலையில் அடையாளம் காணப்பட்டனர்?

கொரோனா: நேற்று நாடு திரும்பியவர்களில் 108 பேர் இன்று திருமலையில் அடையாளம் காணப்பட்டனர்?


வெளிநாடுகளில் இருந்து நேற்றைய நாள் நாடு திரும்பியவர்களில் திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்ட 108 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக திருகோணமலை கொரோனா ஆய்வுகூடத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை கிளப்பன்பேர்க் தனிமைப்படுத்தல் முகாமில் நேற்று தனிமைப்படுத்தப்பட்ட 150 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு எடுக்கப்பட்டிருக்கின்றன.

அவற்றில் 108 பேருக்கு தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக நம்பகரமாக தெரியவந்துள்ளது.

இதேவேளை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஏனையவர்களில் பன்னிருவருக்கு மீள் பரிசோதனை தற்போது இடம்பெற்றுவருவதாகவும் தெரியவருகிறது.

இருப்பினும் குறித்த தகவலை இலங்கை சுகாதார சேவைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE